இயக்குநர் இமயத்திற்குப் புகழ்வணக்கம்!
தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, கிராமிய வாழ்வியலின் மண்வாசனையை வெள்ளித்திரையில் உயிரோட்டத்துடன் பதிவு செய்த படைப்பாளி இயக்குநர் பாரதிராஜா அவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் மீது பேரன்பும் மதிப்பும் கொண்டிருந்த அவர், தமிழீழம் சென்று தேசியத் தலைவரை நேரில் சந்தித்த பின்னர், “தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனைக் கண்டேன்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு நேர்காணல் வழங்கியிருந்தார்.
கிராமிய மக்களின் உணர்வுகள், பண்பாடு, வாழ்வியல் மற்றும் உறவுகளை நகர்ப்புற மக்களிடமும் கொண்டு சேர்த்து, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய பாதையை உருவாக்கியவர் பாரதிராஜா. அவரது படைப்புகள் வெறும் திரைப்படங்களல்ல; அவை தமிழ் மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் பதிவு செய்த காலச்சுவடுகள்.
திரையுலகில் அவர் விதைத்த கலைச் செல்வங்கள் என்றும் அழியாது. அவரது பெயரும் புகழும் தமிழ் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எமது ஆழ்ந்த புகழ்வணக்கமும் மரியாதையும்.
– Tamil Eelam Cyber Force
“கலைஞர்கள் மறைந்தாலும், அவர்கள் படைத்த கலை என்றும் வாழும்.”
