செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா புலிகள் செய்தி இருந்தால் கொஞ்சம் சொல்லப்பா…

செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா புலிகள் செய்தி இருந்தால் கொஞ்சம் சொல்லப்பா…

தமிழீழ இணையப்படை சார்பில் அஞ்சலி

தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பும், பெருமதிப்பும் பெற்ற பெருந்தகை
பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்திய செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமது எழுத்து, இசை, குரல் ஆகிய அனைத்தையும் தாயக விடுதலைக்காக அர்ப்பணித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும் தமிழ் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்த அரிய மனிதர் அவர்.

துரதிருஷ்டவசமாக, அவர்களின் இல்லத்தில் நேரில் சென்று இறுதி வணக்கம் செலுத்த இயலாத நிலையிலும், எங்கள் இதயபூர்வமான அஞ்சலியை பணிவுடன் செலுத்துகிறோம்.

அவரது சேவையும், போராட்ட உணர்வும் என்றும் தமிழர் மனங்களில் நிலைத்திருக்கும்.

ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழீழ இணையப்படை (Tamil Eelam Cyber Force)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *